ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புத்தம் புதிய 108MP கமெராவினை உடைய Mi CC9 Pro கைப்பேசி…!!
உலக அளவில் தொழிநுட்பத்திற்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். நாளுக்கு நாள் அதிரடியாக பல பல பிரபல தொழிநுட்ப நிறுவனங்கள் தனது புதிய புதிய முயற்சிகளை உள்வாங்கி அதை செயலில் வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல்யம் அடைந்து வருகின்றதும் அதிக பில்லியன் கணக்கான பாவனையாளர்களை கொண்டுள்ள விளங்கின்ற பிரபல நிறுவனங்களில் ஒன்றான சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனம் விளங்கின்றது. இந்த நிறுவனமானது தனது புத்தம் புதிய Xiaomi கைப்பேசி கேமராவில் புதிய புரட்சி உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் தனது Mi CC9 Pro கைப்பேசியில் 108 மெகாபிக்சல்களை உடைய கேமராவினை கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கைப்பேசி பிரியர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அண்மையில் இந்த கைப்பேசி எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி Mi CC9 Pro கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அதே வேளையில் இந்த கைப்பேசியின் செல்ஃபி கேமராவும் 32 மெகாபிக்சல்களை உடையது.