ஸ்மார்ட் கைப்பேசிகளின் கமெராக்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம்..!!!
தொழிநுட்ப உலகில் ஸ்மார்ட் கைப்பேசிகள் பிரபல்யம் அடைந்து வருகின்றன நிலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ளடக்கப்படாத அம்சங்கள் என்று எதுவுமே இல்லை என்ற அளவிற்கு பல வசதிகளை கொண்டுள்ளன. இப்படி இருக்கையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் கேமராக்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. இந்த கைப்பேசிகளின் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு பொருட்களின் போலித்தன்மை தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் அரியானது போலியானதா அல்லது தரமானதா என்பதை உறுதிப்படுத்த முடியும். அதற்கான முயற்சிகளை Complutense University of Madrid (UCM) மற்றும் Scintillon Institute of San Diego (USA) என்பன இணைந்து நடத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலுள்ள Deep Learning உத்தி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.