முதுகுவலியால் அவதிப்பட்ட19 வயது இளம்பெண்…!! மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!!!
19 வயதுடைய இளம் பெண் முதுகுவலியால் துடிதுடித்த நிலையில் அவர் உடலுக்குள் துப்பாக்கி குண்டு இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த 19 வயதுடைய அஷ்மா பேகம் என்பவருக்கு ஒரு வருடமாக முதுகு வலியால் துடிதுடித்து வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் முதுகு வலி இருந்து வந்தது. அதையடுத்து மருத்துவமனைக்கு அவர் உடனடியாக சென்றார்.
அங்கு மருத்துவர்கள் அஷ்மாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது உடலுக்குள் துப்பாக்கி குண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து அதை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் துப்பாக்கி குண்டு வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் அஷ்மாவிடமும் அவர் தாயிடமும் விசாரித்தனர். ஆனால் உடலுக்குள் எப்படி துப்பாக்கி குண்டு போனது என தெரியாது என இருவரும் கூறினார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்