லிமாவிலுள்ள வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து..!!
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, விபத்தில் அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால் 200 வீடுகள் தீக்கு இரையாகி சாம்பலாகியுள்ளது.
லிமாவில் உள்ள துறைமுக நகரமான சான் ஜூயான் போஸ்காவில், அதிகாலை திடீரென வீடு ஒன்றில் பற்றிய தீ மளமளவென பரவி அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியது. மேலும் தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்த போதிலும், இந்த விபத்தில் பிளைவுட்டில் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் அனைத்தும் சாம்பலாகின. மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தீவிபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீ விபத்தில் 200 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். .