ஹிஸ்புல்லாவின் வழக்கில் திடீர் திருப்பம்…!!!
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நீதி மன்ற வழக்கு நடைபெற்று வருகின்றது.
இலங்கை பெட்டிகலோ கெம்பஸ் நிறுவனம் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு கடந்த 2017 ஆம் வருடங்களுக்கு முன்னர், கிடைத்த பணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை என்பது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தெரிவுக்குழுவில் சாட்சி அளிக்கும் இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.ஆர். ஜயவர்தன, புதிய அந்நிய செலாவணி சட்டமூலத்திற்கு அமைய 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்த நிதி சம்பந்தமாக விசாரணை நடத்த முடியாது என தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்வதற்கு முன்னர் பெட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்திற்கான சகல நிதியும் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், புதிய திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அதற்கு முன்னர் கிடைத்த பணம் சம்பந்தமான விசாரணை நடத்த மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை என்பது தொடர்பாக ஹீரா நிதியத்தின் பிரதானிகளும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் அறிந்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரடியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் அந்நிய செலாவணி திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயரத்ன, ஆம் என நேரடியாக பதிலத்தார்.
திய சட்டமூலத்தில் உள்ள ஒரு பலவீனம் எனவும் அதனை திருத்த வேண்டும் என்பதை தான் தனிப்பட்ட ரீதியில் உணர்வதாகவும் ஆர்.ஆர். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.