புது டெல்லிக்கு அமைச்சர் மனோ கணேசன் விஜயம்…!!
ஸ்ரீலங்காவின் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆகியோர் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் நோக்கம் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில், புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் 5ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவர்கள் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் இந்த இந்து,பெளத்த மாநாட்டில் கலந்து கொண்டமையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். மேலும் இதனை தொடர்ந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் மனோ கணேசனை உரையாற்றுமாறு இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளரும், இந்தியா பவுன்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் கேட்டுக்கொண்டதற்கு அமைய இரண்டு மதங்களுக்கும் பொறுப்பான அமைச்சர்கள் என்ற வகையில் இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையையும் ஆற்றியுள்ளார்.