யாரும் எதிர்பாராத விதமாக பிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்து..!!
உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும். அதிகளவான மக்களை கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தற்போது தீ பரவல் ஏற்பட்டுள்ளது. அதாவது பிரான்சின் Alpes-de-Haute-Provence மாகாணத்தில் நேற்று விளைநில பிராந்தியம் ஒன்றில் தீ பரவியது.
!Advert!
இதன் போது 74 ஏக்கர் நிலம் கருகி சாம்பலாகியது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் போது அங்கு வந்த 140 வீரர்கள் வாகனம் மூலமாகவும், விமானம் மூலமாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் அங்கு பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது. இதன் விளைவாக 30 ஹெக்டேயர்கள்(74.1ஏக்கர்) நிலப்பரப்பை தீ எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.
!Advert!
பிரான்சில் நண்பகல் 12:40 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ பரவலை தீயணைப்பு வீரர்கள் 17:00 மணி அளவில் பின்னரே கட்டுப்படுத்தினர்.
மேலும் இது பற்றி விசாரிக்கையில் இந்த தீயானது ஒரு விபத்து எனவும் எதிர்பாரா விதமாக பரவியுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.