திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞன் தூக்கிட்டு தற்கொலை..! வெளியாகி உள்ள காரணம்..!!
திரு நங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர் மனைவியுடனேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விடயம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரைக்காலை சேர்ந்த திலீப் என்ற 26 வயது இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உஜாலா கம்பெனியில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்த திலீப் சிவானி என்ற திரு நங்கையை கண்டதும் காதலில் விழுந்துள்ளார். பின் அவரது பழக்கங்கள் பிடித்துப் போக திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். முதலில் மறுத்தாலும் பின் திலீப்பின் அன்பில் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் சிவானி.
இவர்களின் காதல் திலீப் வீட்டிற்கு தெரிய வர பிரச்சனை வெடித்தது. ஆனால் காதலில் உறுதியாக இருந்த திலீப் சிவானியை திருமணம் செய்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனாலும் திலீப்பின் பெற்றோர் விடுவதாக இல்லை. திருநங்கை என்பதால் சிவானியை கேவலப் படுத்தி திட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் சிவானி திலீப்பிடம் தன்னை விட்டு செல்லும் படி கூறியுள்ளார். இந்த நிலையில் மனமுடைந்து போய் இருந்த திலீப் மற்றும் சிவானி விடிந்து நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அயலவர்கள் பொலீஸுக்கு அறிவித்துள்ளனர். பொலீஸார் வந்து பார்த்த போது இரு அறைகளில் திலீப் மற்றும் சிவானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சடலத்தை மீட்ட பொலீஸார் மருத்துவ சோதனைக்காக அனுப்பியுள்ளனர்..!