பிரான்ஸிலுள்ள பிரபல திரையரங்கம் ஒன்றை சேதப்படுத்திய பிரான்ஸ் வாழ் தமிழர்கள்…!!!
பிரான்ஸில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றை பிரான்ஸ் வாழ்கின்ற தமிழர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் இனி பிரான்ஸ் திரையரங்கில் தமிழ் படங்கள் திரையிடப்படுமா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்த திரையரங்கை அஜித் ரசிகர்கள் சேதப்படுத்தியதால் அந்தப் பகுதி விநியோகஸ்தருக்குக் கிட்டத்தட்ட 5.5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள இந்த பிரபல திரையரங்கம் லீ கிராண்ட் ரெக்ஸ் என்று அழைக்கப்படும். இந்த திரையரங்கில் தமிழர் படங்கள் திரையிடப்படுவது ஒரு கவுரவமாகவே கருதப்படுகின்றது. சர்கார்’, ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் இங்கு திரையிடப்படுகின்றது. அந்த வகையில் தற்போது அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரையிடப்பட்டது.
அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் வருவதை பார்த்து ஆடிப் பாடி, திரையை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர். இது போன்ற சம்பவங்களால் திரையரங்கு சேதமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து திரையை மாற்ற 7000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இனிமேல் இந்த திரையரங்குகளில் தமிழ் படம் திரையிட மாட்டாது என தெரிவித்ததோடு, ரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து, பிரான்ஸ் விநியோகஸ்தர்கள் அமைப்பான EOY என்டர்டெய்ன்மென்ட், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா சினிமாவுக்கே இது பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் கிடைத்த வாய்ப்பை என்றும், அஜித் ரசிகர்களைக் கலாய்த்து வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.