இன்றைய ராசி பலன் – 08.08.2021
இன்றைய பஞ்சாங்கம், 08-08-2021, ஆடி 23, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி இரவு 07.20 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூசம் நட்சத்திரம் காலை 09.19 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஆடி அமாவாசை. நவகிரக வழிபாடு நல்லது.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும்.வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நீண்ட நாளாக தள்ளிப் போன காரியம் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். சகோதரர்களால் பயனடைவீர் கள். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மிதுன ராசி காரர்களே: எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும்.குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.வண்டி, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்து கொள்வார்.
கடக ராசி நேயர்களே:கணவன்-மனைவிக்குள் வீண்சந்தேகம் வந்து நிற்கும்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் வீண்சந்தேகம் வந்து நிற்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
கன்னி ராசி காரர்களே:உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும்.கொடுத்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே: உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள், சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும்.தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சுமுக உறவு ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி சந்தோஷம் அதிகரிக்கும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:உங்கள் மீது வீண் பழி சுமத்த சிலர் முயற்சிப்பார்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக்கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
மகர ராசி காரர்களே:மனைவி வழியில் உதவிகள் அதிகரிக்கும்.கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஆத ரவு கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே: பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலருக்குத் தந்தைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சகோதரர் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபச்செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மீன ராசி நேயர்களே:
பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும்.வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவருத்தம் தரும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.