இன்றைய ராசி பலன் – 09.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 09-01-2021, மார்கழி 25, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:
தாயாரின் உடல் நிலை சீராகும்.கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் அதிகரிக்கும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும்.
கடக ராசி நேயர்களே:
பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம்.பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படுகிறது.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
கன்னி ராசி காரர்களே:
பூர்வீக சொத்து பிரச்னைக்குசுமூக தீர்வு கிடைக்கும்.தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
துலாராசி உறவுகளே:
நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.பயணங்களை தள்ளி வைக்கவும். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும்.தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். வழக்கமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.
தனுசு ராசி அன்பர்களே:
உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கை நிறைய பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும்.நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
மகர ராசி காரர்களே:
தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்ப ராசி உறவுகளே:
மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே:
அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.உடல்நலனில் கவனம் தேவை.குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.