இன்றைய ராசி பலன் – 11.07.2020
இன்றைய பஞ்சாங்கம் 11-07-2020, ஆனி 27, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 01.33 வரை பின்பு தேய்பிறை சப்தமி. நாள் முழுவதும் உத்திரட்டாதி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
முயற்சிகள் சாதகமாக முடியும்.தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:
சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கடக ராசி நேயர்களே:
தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றிகொள்ள பாருங்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம்.
கன்னி ராசி காரர்களே:
உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். எதிரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.
துலாராசி உறவுகளே:
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.தாயின் உடல்நலனில் கவனம் தேவை.மனைவி வழியில் நல்ல செய்தி வரும், வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும்.பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.
மகர ராசி காரர்களே:
தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். அதிகாரபதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். யோகாதியானத்தில் மனம் லயிக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும்.வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும்.அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம்.தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.