இன்றைய ராசி பலன் – 21.01.2020
இன்றைய பஞ்சாங்கம், 21-10-2020, ஐப்பசி 05, புதன்கிழமை, பஞ்சமி திதி காலை 09.08 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு பூராடம். மரண யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
ரிஷப ராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத செலவுகளால் சிலருக் குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். காரம் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். சகோதர வகை யில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம்.
மிதுன ராசி காரர்களே: கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றைக் கூற வாய்ப்பு உண்டு.புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.
கடக ராசி நேயர்களே:அரசால் அனுகூலம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
சிம்ம ராசி அன்பர்களே: வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
கன்னி ராசி காரர்களே: மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாராசி உறவுகளே:உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.குடும்பத்தில் அமைதி திரும்பும். நண்பர்கள் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர் களால் சங்கடங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது.நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
தனுசு ராசி அன்பர்களே:ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் விமர்சித்தாலும் கலங்கி கொண்டிருக்காதீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும், வியாபாரத்தில் வீண்செலவுகள் மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மகர ராசி காரர்களே: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும்.பணவரவு சிறப்பாக இருந்தாலும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள்.ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.
கும்ப ராசி உறவுகளே:சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை சற்று குறையும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு ஏற்படும்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள்.நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.