இன்றைய ராசி பலன் – 22.01.2022
இன்றைய பஞ்சாங்கம். 22-01-2022, தை 09, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 09.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரம் நட்சத்திரம் பகல் 10.38 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பகல் 10.38 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. திருவையாறு தியாக பிரம்மேந்திராள் ஆராதனை. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள்இன்று முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். தாயின் தேவை யைப் பூர்த்தி செய்வீர்கள்.பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி காரர்களே:உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும்.சகோதரர்களால் பயனடைவீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.
கடக ராசி நேயர்களே:எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணை யாக நடந்துகொள்வார்கள்.உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.குடும்பத்தில்இதுவரை இருந்து வந்த கூச்சல் குழப் பங்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும்.
சிம்ம ராசி அன்பர்களே:கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.ண் செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வியாபாரத் தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
கன்னி ராசி காரர்களே:பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
துலாராசி உறவுகளே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். டல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும்.தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:உறவினர்களின் ஆதரவு கிட்டும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் வியாபாரத் தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும்.குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள்.
மகர ராசி காரர்களே:சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக்கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.
கும்ப ராசி உறவுகளே:தந்தையின் விருப் பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். முக்கிய முடிவுகளை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. த்தியோகத்தில் உயர் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.