இன்றைய ராசி பலன் – 23.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 23-02-2021, மாசி 11, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.05 வரை பின்பு வளர்பிறை துவாதசி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.31 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 12.31 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.திடீர் செலவுகளும் ஏற்படும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே:
வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.
மிதுன ராசி காரர்களே:
பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். தாய்வழியில் நன்மை உண்டாகும்.பழைய கடன்கள் வசூலாகும்.மனதில் ஏற்பட்டி ருந்த குழப்பங்கள் நீங்கும்.
கடக ராசி நேயர்களே:
அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:
முன் கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து போகும்.குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும்.குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும்.
கன்னி ராசி காரர்களே:
வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.இளைய சகோதரர்களால் உதவியும் உற்சா கமும் உண்டு.வேற்றுமதந்தவர் உதவுவார். பிற்பகலுக்குமேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.நண்பர்களிடம் கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாராசி உறவுகளே:
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிள்ளைகளின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.தேவையான பணம் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.
தனுசு ராசி அன்பர்களே:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பிள்ளைகளின் பணிகளில் அவர்களுக்கு உதவி செய்வீர்கள்.குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப் பெயர் நீங்கும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு.
மகர ராசி காரர்களே:
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும்.வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள்.உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும்.உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். உடல்நலனில் கவனம் தேவை.புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
மீன ராசி நேயர்களே:
உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.