இன்றைய ராசி பலன் 31.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.31-05-2019, வைகாசி 17, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி மாலை 05.17 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.11 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 12.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷராசி நேயர்களே:நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
ரிஷபராசி அன்பர்களே: உடல் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும் நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.மனதிற்கு இதமான செய்தி வரும்.மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
மிதுனராசி காரர்களே:திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.
கடகராசி நேயர்களே:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
சிம்மராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் காலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
கன்னி ராசி காரர்களே:செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும்.கோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்..
துலாராசி உறவுகளே:முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
விருச்சிகராசி நேயர்களே:நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
தனுசுராசி அன்பர்களே:கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.புது வேலைக் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.உடல் நலனில் கவனமாக இருக்கவும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரராசி காரர்களே:உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
கும்பராசி உறவுகளே:சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும்.வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள்.நேர்மறை எண்ணம் பிறக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மீனராசி நேயர்களே: தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.