இயற்கை முறையில் கூந்தல் வளர்வதற்கும் பளபளப்பாக மின்னுவதற்கும் வெங்காய சாற்றை இப்படி பயன் படுத்துங்கள்..!
கூத்தல் வளர்ச்சியை அனைவரும் விரும்புவது சாதாரண விடயம் தான்.ஆனால் அனைவருக்கும் கூந்தல் இலகுவில் வளர்வதில்லை. இதற்காக நாம் எத்தனை செயற்கை மருத்துவங்கள் செய்தாலும் முடி வளர்வதில்லை. இதற்கு வெங்காயத்தை இயற்கை முறையில் செய்யக் கூடிய மருத்துவங்களை பார்க்கலாம். வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும். பின் அதனை முடியின் வேர் வரை பூசி துணி ஒன்றினால் தலையை சுற்றி 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து தலையை கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்து வர முடி உதிர்தல் நின்று விடும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் வெங்காய சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பின் கூத்தலில் முனி முதல் அடி வரை பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பின் சுடு நீரில் துணி ஒன்றை நனைத்து பிழிந்து தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்தின் பின் குளிக்கவும்.
இதனால் இறந்த செல்கள் நீக்கப் படுவதுடன் கூந்தல் வளர்ச்சியும் பளபளப்பும் அதிகமாகிறது. வாரம் ஒரு முறை இதனை செய்யலாம். அடுத்து வெங்காய சாற்றில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் பூசி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து குளித்தால் சொடுகு தொல்லை வராது அத்துடன் தலைமுடியும் வளர்ச்சி பெறும். இதனை நீங்கள் விரும்பும் நேரங்களில் செய்யலாம் குறிப்பாக வெயில் காலத்தில் பயன்படுத்தலாம்..! இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்தால் போதுமானது. உங்கள் கூந்தல் வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும்..!