தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 346 ஆக அதிகரிப்பு..!!!
தென்கொரியாவில் கொடிய உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 346 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் மட்டும் தென்கொரியாவில் 146 பேர் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் தென்கொரியாவில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரை இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவில் 100 பேருக்கு மேலாக கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 85 பேர் அந்த நாட்டின் டேகு (னுயநபர) நகரிலுள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.