வுஹான் நகரில் மற்றுமொரு மருத்துவர் உயிரிழப்பு..!!
சீனாவில் வுஹான் நகரை புரட்டி எடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவர் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி 29 வயதுடைய சியா சிசி என்ற மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் இந்த நிலையில், வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த போது அவர் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இன்று அதிகாலை வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் 3,000 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.