கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் துவண்டுபோயுள்ள சீனர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்ட இசைக்கலைஞர்..!!
சீனாவை புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உடைந்துபோயுள்ள சீனர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பெல்ஜியத்தை சேர்ந்த Jean-François என்ற இசைக்கலைஞர் ஒருவர் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த இசைக்கலைஞர் இயற்றியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பேசிய அவர், வைரசிடம் இருந்து தான் மக்கள் தள்ளி இருக்க வேண்டுமே தவிர, அன்பிடம் இருந்து அல்ல என தெரிவித்துள்ளார். ஹூபே மாகாணத்தின் பாரம் பரிய இசையை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் மருத்துவர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.