சீனாவை புரட்டி எடுக்கும் கொடிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு..!!
சீனாவில் கோர தாண்டவமாடும் கொடிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72,000ஐ கடந்துள்ளது.
ஜப்பான் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் டயமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இன்றைய தினம் மேலும் 88 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த கப்பலில் 542 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதன் இடையில் சீனாவின் வுஹான் நகரிலுள்ள Wuhan Wuchang மருத்துவமனையின் தலைவரான Liu Zhiming இன்றைய தினம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.