கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா வைரஸ் இருந்தால் அது அவர்களின் கருவிலுள்ள குழந்தைகளை பாதிக்குமா??
சீனாவை புரட்டி எடுக்கும் உயிர்க்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவையில் 1500க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த நிலையில் கொரோனா வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் மிக சுலபமாக பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மேலும் இருவருக்கு அதிவேகமாக பரவுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிமோனியா காச்சல் இருப்பது கண்டறியப்பட்ட, 26 முதல் 40 வயதுக்கு உட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். சீனாவின் வூஹான் நகரில் இந்தப் புதிய ஆய்வு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தங்களது கர்ப்பக் காலத்தின் ஒன்பதாவது மாதங்களில் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் சிசேரியன் மூலம் வெற்றிகரமாகக் குழந்தை பிறந்தது. இந்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால்,கொடிய கொரோனா வைரசால் கருவிலுள்ள குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என பரிசோதனையில் அறியப்பட்டது.
குறித்த ஆய்வின் முடிவில் புதிதாக குழந்தையைப் பெற்றெடுத்த தாய் ஒருவருக்கு, குழந்தை பிறந்து 36 மணி நேரங்களுக்குப் பிறகு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்து கொரோனா தொற்றிவிடக் கூடாது என்பதற்காக, தாயையும் குழந்தையையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தி வைத்தனர். நெருங்கிய தொடர்பு மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவே வேறு வழியின்றி இவ்வாறு பிறந்த குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் மனம் வருந்தியுள்ளனர்.
அதே நேரத்தில் நடத்திய ஆய்வில் 9 மாத கர்ப்பிணிப் பெண்களிடமே நடத்தப்பட்டது. ஆனால் 3 அல்லது 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது அவர்களின் கருவிலுள்ள குழந்தைகளுக்கு இவ்வைரஸ் பரவுமா? என்ற கேள்வி வைத்தியர்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டு வருகிறது.