நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி..!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணி புரிபவர்களை பரிசோதனை செய்த போது கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தனது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அதிரடி அறவித்தலை நாசா வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னர் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் என்பன இவ்வாறான அறிவித்தலை விடுத்திருந்தது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.