எதிர்வரும் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வரும் டோனி.! ரசிகர்கள் மகிழ்ச்சியில்!!
கடந்த 2019 ஆண்டு நடந்த உலகக்கிண்ண போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்
மகேந்திரசிங் டோனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் பி.சி.சி.ஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் டோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் டோனியின் ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் போட்டியில் டோனி பங்கேற்க தயாராகி வருகிறார். இதனால், டோனியின் ரசிகர்கள் அவரை எதிர்பார்த்து கிரிக்கெட் அரங்கத்தை நிரப்புவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்வம் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டு ரசிகர்கள் இடையேயும் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் படி பாகிஸ்தானில் சூப்பர் லீக் போட்டி, ராவல்பிண்டியிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில், இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான் அணிகள் மோதின. அதை பார்க்க வந்த இஸ்லாமாபாத் யுனைடெட் ரசிகர் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் டோனியின் பெயர் மற்றும் எண்ணை பதிவிட்டிருந்தார். போட்டியின் போது பலரது கவனத்தை ஈர்த்த டோனி, தனது டிவிட்டர் பக்கத்திலும் அதை பதிவிட்டார். அதில் “எங்கள் முழு ஆதரவு எப்போதும் டோனிக்கு உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை டோனி ரசிகர்கள் தங்கள் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.