அவுஸ்திரேலியாவிற்குள் செல்லும் அனைவரும் 14 நாள்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவது கட்டாய
சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் செல்லும் அனைவரும் 14 நாள்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவது கட்டாயமாகிறது. கொடிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, அவுஸ்திரேலியா நேரப்படி இன்று நள்ளிரவு ஆரம்பமாகும். அதோடு சொகுசுக் கப்பல்கள் அணைய, முற்றிலுமாய்த் தடை விதிப்பதாக அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 269 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் அமெரிக்காவில் இருந்து வந்ததாகத் திரு. மோரிசன் தெரிவித்தார்.