கட்டிய மனைவியை ஏமாற்றி காதலியுடன் ரகசியமாக இத்தாலிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!
கட்டிய மனைவியை ஏமாற்றி காதலியுடன் ரகசியமாக இத்தாலிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியிடம் வேலை விடயமாக செல்வதாக பொய் சொல்லி விட்டு காதலியுடன் ரகசியமாக இத்தாலிக்கு சென்றுள்ளார். காதலியுடன் ஜாலியாக இத்தாலியில் சுற்றி விட்டு யாருக்கும் தெரியாமல் நல்ல பிள்ளை போல் பிரித்தானியா திரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு திடீரென கொரோனா அறிகுறிகள் தோன்றவே, சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்களிடம், தான் காதலியுடன் இத்தாலிக்கு சென்றது தொடர்பாக கூறியுள்ளார்.
(ஆனால், அந்த காதலி யார் என்றோ, அவர் பெயர் என்னவென்றோ அவர் மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை) தன் கணவர் தனக்கு துரோகம் செய்ததால் தான், அதாவது, தனக்குத் தெரியாமல் காதலியுடன் இத்தாலிக்கு சென்றதால் தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியது என்ற உண்மை தெரியாமலே, அவரது மனைவி தன்னைத் தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.