கொரோனா வைரஸ் நெருக்கடி நிலை காரணமாக 36,000 ஊழியர்களை இடை நீக்கம் செய்த பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம்…!!!
கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் நெருக்கடி நிலை காரணமாக பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தனது 45,000 ஊழியர்களில் 36,000 ஊழியர்களை இடை நீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தொழிற்சங்கங்களுடன் ஒரு உடன்பாட்டை செய்துள்ளது. அதன் அடிப்படையில் 80 சதவீதமான விமானப் பணியாளர்கள், ஊழியர்கள், பொறியியாலாளர் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோரை பணி இடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இது தொடர்பாக கலந்துரையாடல்கள் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் எயார்வேஸ், கொடிய கொரோனா வைரஸ் நெருக்கடி நிலை காரணமாக நேற்று முன் தினம் பிரிட்டனின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகக் தெரிவித்தது.