அவுஸ்திரேலியா ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அவுஸ்திரேலியாவில் ஈஸ்டர் தினம் முடிவடைந்த பின் படிப்படியாக அனைத்து கடைககளும் திறக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் குர்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் சிறிய கடைகள், DIY கடைகள் மற்றும் தோட்டக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஜனாதிபதி செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார். எல்லாக் கடைகள், ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் சிகையலங்கார கடைகள் மே 1 ஆம் திகதி முதல் திறந்து வைக்கப்படும். அதே நேரத்தில் மே மாத நடுப்பகுதியில் உணவகங்களும் ஹோட்டல்களும் உரிய முறையில் திறக்கப்படும்.
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூன் மாத இறுதி வரை பெரிய நிகழ்வுகள் எதுவும் நடக்காது என குர்ஸ் தெரிவித்தார். மே மாத நடுப்பகுதி வரை வீட்டுப் பள்ளி இருக்கும், ஏப்ரல் மாத இறுதியில் பள்ளிப்படிப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும். சமூக இடைவெளி மற்றும் முகமூடி அணிவது தேவையான இடங்களில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று குர்ஸ் கூறினார். அவுஸ்திரியாவில் 12,051 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 204 பேர் உயிரிழந்துள்ளனர்.