ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள மெரிக்க இராணுவ வீரர் பலி..!!
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்துள்ளதாக தாலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். அமெரிக்க துருப்பினருடன் ஒன்றிணைந்து செயல்பட்ட ஆப்கானிஸ்தானிய விசேட அதிரடிபடை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிய வட மாகாணமான குண்டூசில் அமெரிக்க துருப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட குண்டு தாக்குதலிலேயே இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் து போன்ற நிலையில், அமெரிக்க இராணுவம் விடுத்த அறிக்கையில், அமெரிக்க படையணியை சேர்ந்த ஒருவர் தாக்குதல் சம்பவம் ஒன்றின் போது மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அமெரிக்க இராணுவத்தின் உறுப்பினர் தொடர்பாகவோ அல்லது சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களோ வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் தலைமையிலான நேற்றோ படையணியில் சுமார் 20,000 பல்வேறு நாடுகளை சேர்ந்த படையினர் தற்போது ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர்.
இந்த படையணியினர் ஆப்கானிஸ்தானிய இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவதுடன், இராணுவ நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ளனர். இது தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 2019 ஆம் ஆண்டில் தாலிபான்களின் பல்வேறுபட்ட தாக்குதல் சம்பவங்களில் பல அமெரிக்க துருப்பினர் உயிரிழந்துள்ளனர்.