நேற்றைய தினம் 24வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டமாக நடந்து சாதனையை முறியடித்தது!!
28 ஆம் திகதி நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் 1995 ஆம் ஆண்டு நடத்திய போராட்ட சாதனை முறியடித்துள்ளது. 28ஆம் திகதி பாரிஸில் 24வது நாளாக போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியத்திற்கு எதிராக நடத்தப்பட்டுள்ள குறித்த போராட்டமானது நேற்று , 1995 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அந்த கால அரசாங்கத்தை எதிர்த்து 22 நாட்கள் தொடர் போராட்டம் நடந்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில், 300 வரையான மஞ்சள் மேலங்கி போராளிகளும், CGT, FO, Solidaires மற்றும் FSU ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 13:30 மணி அளவில் கார்-து.-நோர் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து சத்தலே நிலையம் நோக்கி பயணித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் “மிக நீண்ட காலமாக அரசு அமைதி காக்கின்றது. அதனால் நாங்கள் கட்டாயமாக போராட்டத்தை தொடரவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.