கொடூரமாக துண்டிக்கப் பட்ட நிலையில் படகில் கரை ஒதுங்கிய பலரது சடலங்கள். ! மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம். !!
கரை ஒதுங்கிய படகு ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 5 உடல்கள் மற்றும் 2 தலைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சாடோ தீவில் கரை ஒதுங்கிய படகு ஒன்றிலேயே இந்த மனித உடலின் பாகங்கள் மீட்கப் பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் கரை ஒதுங்கிய குறித்த படகை சோதனை இட்டபோது துர்நாற்றம் வீசிய நிலையில் உடலின் பாகங்கள் மீட்கப் பட்டுள்ளது. வடகொரியாவை சேர்ந்த குறித்த படகில் வடகொரியாவை சார்ந்தவர்கள் பயணம் செய்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகிக்கும் நிலையில்
சாடோ தீவுப் பகுதியில் கடல் கொள்ளையர்கள் அட்டகாசம் இருப்பதால் அவர்களால் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம்..அல்லது ஏதேனும் முன் விரோதம் காரணமாக அழைத்து வந்துகொல்லப் பட்டிருக்கலாம் என பொலீஸார் சந்தேகித்து வரும் நிலையில் படகில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப் பட்ட உடல் பாகங்கள்
ஐந்து பேர் உடையதா அல்லது இன்னும் அதிகமானவர்களுடையதா என்பதை வைத்திய பரிசோதனையின் பின் தான் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தற்போது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது…!