ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பது நான் தான் – மகிந்த ராஜபக்ச
இலங்கையின் சமகால அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பது நான் தான் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் சமீபகால நடவடிக்கைகளுக்கு நான் பிரதமராக இருப்பது தான் காரணம் என அவர் கூறியுள்ளார்.
19ஆம் திருத்தத்தில் இலங்கை அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் நாங்கள் எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் ஜயந்தி விகாரையில் தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.