அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இராணுவத்த்தினர்..!!
அவுஸ்ரேலியாவில் மல்லாக்கட்டா பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்ரேலிய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். மல்லாக்கட்டாப் பகுதியில் இருந்து சுமார் 1000 பேர் வரை மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள கடற்கரை பகுதியில் கடந்த திங்கள் கிழமை இரவு முதல் சுமார் 4,000 பேர் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவசரசால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியுசவுத் வேல்ஸ் மாநிலத்தின் சில இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். அவுஸ்ரேலியாவில் பரவியுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதோடு இதுவரையில் 28 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.