பதுளையில் விபத்தில் சிக்கியது விமானம்; நால்வர் பலி!
வீரபலப் பகுதியிலிருந்து இரத்மலானை நோக்கிச் சென்ற விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளைப் பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கி விழுந்துள்ளது.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதை இலங்கை விமானப் படை உறுதிசெய்துள்ளது.
விமானப் படையினர் இருவரும், கண்காணிப்பாளர்கள் இருவருமே இவ்வாறு இறந்துள்ளனர்.
அதேவேளை, குறித்த பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.