கொரோனா வைரஸ்: முகக் கவசங்கள் குறித்து அரசு விடுத்த அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களுக்கான விலைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், தற்போது இலங்கையிலும் பெரும் பீதியை கிளப்பியுள்ள நிலையில் அதிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது.
அதன்படி, குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களுக்கான விலைகளை அதிமாக்கி சில வணிக நிறுவனங்கள் விற்பனை செய்து வந்துள்ளன.
இதையடுத்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், முகக் கவசங்களின் விலைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
முகக்கவசங்களின் விலைகள் அதிகமாகியுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வர்த்தகமானி அறிவிப்பின்படி, பயன்பாட்டின் பின்னர் வீசக்கூடிய முகக் கவசம் ஒன்றின் அதிகூடிய விலை 15 ரூபா எனவும், 95 ரக முக கவசத்தின் விலை 150 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.