கொடிய கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் துரிதகதியில் வுஹான் நகரில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது..!!
சீனாவை புரட்டி எடுக்கும் கொடிய கொரொனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனையானது சீன அரசாங்கத்தினால் கடந்த 8 நாட்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. கொடிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 362 பேர் உயிரிழந்ததுடன் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்நிலையில் சீனாவின் வுஹான் நகரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 1000 படுக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதற்காக இது பெரிதும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் நேற்றைய தினம் கொரொனா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவுக்கு வெளியில் பதிவான முதல் மரணமாக கருதப்படுகிறது. அதேபோல் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இதுவரை கொரொனா வைரஸ் தொற்று காரணமாக 150 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.