அமெரிக்கா எச் 1 பி விசா வழங்குவதை முற்றாக நிறுத்த பரிசீலனை!
உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பெருமளவு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி எச்1 பி, எல் 1, ஜே 1 விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைப்பது தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் குடியேற்ற உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி முதல் 60 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பிறப்பித்துள்ள இந்த தடையை எதிர்வரும் 22 ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணி புரிவதற்கான எச் 1 பி விசாக்கள் வழங்குவதை எதிர்வரும் அக்டோபர் 1 முதல் ஒரு வருடத்தில் நிறுத்தி வைப்பது பற்றி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எல் 1, ஜே 1 விசாக்களையும் நிறுத்தி வைக்கப் பரிசீலித்து வருகிறது. அதேவேளை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்கள், உணவு வழங்கல் நிறுவனங்களுக்குப் பணிக்கு வருபவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. எச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை 20 ஆயிரம் டொலராக உயர்த்தவும் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
In view of the massive unemployment in America due to the #COVID19Pandemic, US President #DonaldTrump is considering suspending a number of employment visas including the #H1BVisa, most sought-after among Indian IT professionals.https://t.co/lFN25abO9f
— The New Indian Express (@NewIndianXpress) June 12, 2020