இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எச்சரிக்கை விடுத்த கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி..!!!
இலங்கையில் காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட்டனரா? அப்படியானால் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார். அந்நாட்டு பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையில் காணாமல் போனவர்கள், வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தி காணாமல் ஆக்குவது தொடர்பாக வரலாற்றை கொண்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை நான் சந்தித்தேன். அவர்கள் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்காக கடந்த 3 வருங்களுக்கு அதிகமாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த யுத்த காலமான 2009 ஆம் ஆண்டு மே மாதம் தனது கணவரையும் ஏனையோரையும் இராணுவ பேருந்தில் அழைத்துச் சென்றதை ஆசிரியை ஒருவர் பார்த்துள்ளார். அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களும், பெண்களும் காணாமல் போயுள்ளனர்.
இலங்கையின் புதிய அரங்கமும், புதிய ஆட்சியும், புதிய ஜனாதிபதியும் ஆட்சிக்கு வந்துள்ளன. புதிய கோட்டாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்து போயுள்ளார்கள் கடந்த மாதம் கூறியிருந்தார். காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலர் கனடாவில் வசிக்கின்றனர். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன தான் நடந்தது என்று கேள்விக்கு பதில் கேட்கின்றனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட்டனரா, எவ்வாறு அவர்கள் உயிரிழந்தனர்? அவர்களின் மரணத்திற்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என கேட்கின்றனர். உண்மை மற்றும் நிதிக்காக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோருகின்றனர். இது தற்போது கட்டாயம் தேவையானது என தெரிவித்துள்ளார்.
Videos & Video Copyrights Owned By: Lankasri News