பிரித்தானியாவை புரட்டி எடுக்கும் டென்னிஸ் புயல்..!!!
பிரித்தானியாவில் டென்னிஸ் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகின்றது. கடந்த வாரங்களில் பெய்த கடுமையான மழையினால் வடக்கு வேல்ஸ் மற்றும் வடமேற்கு பிரித்தானியப் பகுதிகள் நீரினால் சூழப்பட்டுள்ளன.
அண்மை நாட்களில் 8 ஆறுகள் அவற்றின் உச்சபட்ச நீர்மட்ட அளவை எட்டியுள்ளன என்று சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய முழுவதும் கிட்டத்தட்ட 120 வெள்ள எச்சரிக்கைகள் இன்னமும் நடைமுறையில் உள்ளன. உயிருக்கு ஆபத்தான 6 வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது வேல்ஸ் எல்லைக்கு அருகே உள்ள (Lugg) லக், (Severn) செவர்ன் மற்றும் (Wye) வை போன்ற நதிகளைச் சூழவுள்ள பகுதிகளிலேயே கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வை நதியின் வெள்ளப்பெருக்கு 110 வருடங்களாக இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வேல்ஸ், ஹெறிஃபேர்ட்ஷையர், வோர்ஸ்ரஷையர் மற்றும் ஷ்ரோப்ஷைர் போன்ற இடங்களில் , மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.