பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரான்ஸின் உதவியை நாடியுள்ளது..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது இருக்கும் பிரச்சினையால் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான வர்த்தகம், போக்குவரத்து சேவை போன்றன பல செயற்பாடுகளை முறித்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திருப்ப முயன்றுள்ளது.
இதனை தொடர்ந்து சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது. ஆனால் ஐ.நா பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கவில்லை இதனால் பாகிஸ்தானின் முயற்சி அனைத்தும் தோல்வியடைந்தமை. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான பிரான்ஸின் உதவியை நாடும் விதமாக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லெட்ரியனிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொலைபேசி உரையாடலின் போது சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி இந்திய அரசாங்கம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், இதனால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லெட்ரியன், இரு நாடுகளையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும், இந்த விவகாரம் தீவிரமடையாமல் இருப்பதை இரு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.