மலேசியாவில் உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்…!!! எங்களை மீட்க யாருமே இல்லையா?? இதோ வைரலாகும் வீடியோ..!!
மலேசியாவிற்கு பணிபுரிய சென்று தமிழக இளைஞர்கள் உணவின்றி சிக்கி தவிக்கும் நிலையில் தங்களை மீட்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த ஐசக் மற்றும் அவரது மனைவி கிரிஜாவும் சேர்ந்து ஒரு ஜிஆர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி குமரி மாவட்டத்தை சேர்ந்த அனீஷ், தனீஷ், ராஜேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் தலா ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அவர்களை மலேசியாவில் வெல்டர் பணிக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு இந்த 4 பேரும் ஏஜெண்டுகளிடம் விற்றுள்ளனர்.
அதை தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக கூறியவர்களும் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அந்த 4 இளைஞர்களும் வேலையும் இல்லாமல், உணவும் இல்லாமல் தவிர்த்துள்ளனர். அதையடுத்து அந்த நான்கு பேரில் தனீஷ், ராஜேஷ் ஆகிய இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு வந்த நிலையில் மலேசியாவில் உள்ள அனீஷ், பிரகாஷ் ஆகியோர் தங்களை மீட்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Videos & Video Copyrights Owned By News7 Tamil