சிரியா விடுத்த முக்கிய அறிவிப்பு…!!
துருக்கியின் இராணுவத்தை எதிர்கொள்ளும் குர்திஷ் படை அணியினருக்கு உதவ சிரிய அரசாங்கம் முன் வந்துள்ள சில மணி நேர காலத்தில் அவர்கள் நாட்டின் வடபிராந்தியத்தை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா அரசங்கம் அண்மையில் குறிப்பிட்ட நகரத்தில் இருந்து 30 மைல்களுக்கு அப்பால் உள்ளனர். இந்த பிரதேசத்தில் இருந்து துருக்கி படையணியினரை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக சிரியா அறிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் குர்திஷ் படையணியினரை, எல்லை பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கில் துருக்கி இராணுவ நடவடிக்கையை தீவிரமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் வார இறுதியில் நடைபெற்ற மோதலில் ஏராளமான பொது மக்களும், ஆயுததாரிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து இரு முக்கிய நகரங்களை துருக்கி கைப்பற்றி உள்ளது.
மேலும் இந்த நிலையில், வட சிரியாவில் நிலை கொண்டுள்ள மிகுதியான அனைத்து அமெரிக்க துருப்பினரையும் மீள அழைக்கப் தீர்மானித்துள்ளதாக நேற்று அமெரிக்கா கூறியுள்ளது. அதை தொடர்ந்து குர்திஷ் படையினருக்கு உதவ சிரிய அரசாங்க படையினர் முன் வந்துள்ளது.