பிரித்தானியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஒப்புதல்…!!!
எதிர்வரும் ஆண்டு (2020) ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Donald Tusk தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் flextension என்று அழைக்கப்படும் இந்த பிரெக்சிட் நீட்டிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, ஒப்பந்தம் ஒன்று நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், அந்த திகதிக்கு முன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவுக்கு முன்கூட்டியே, அதாவது, டிசம்பர் மாதம் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தும் திட்டத்தை தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தயாராகும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது .
EU agrees to Brexit deadline extension up to 31 January 2020, says Donald Tusk https://t.co/mqPH3Rey1H
— BBC Breaking News (@BBCBreaking) 28 October 2019