பங்களாதேஷில் 19 வயது பாடசாலை மாணவி ஒருவரை கொலை செய்த 16 குற்றவாளிக்கு மரண தண்டனை..!!!
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலுள்ள சிறிய நகரான ஃபெனியில், கடந்த ஏப்ரல் மாதம் நுஷ்ரத் ஜஹான் ராஃபி என்ற 19 வயதுடைய மாணவி படுகொலை செய்யப்பட்டார்.
அவர் கற்று வந்த பாடசாலையின் தலைமை ஆசிரியரது பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடு கூறியதை தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த மாணவியின் கொலை தொடர்பாக பங்களாதேஷில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததுடன், சம்பவத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்ட மாணவியின் இரண்டு வகுப்புத் தோழிகளும் அடங்குகின்றனர்.