நடிப்போ நடிப்பு உலகமாக நடிப்பு ஈன இரக்கம் இன்றி தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடிய அண்ணன்….!!! பெங்களூரில் நடந்த கொடூரம்..!!
இந்தியாவில் பெங்களூரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கடந்த 8 ஆம் திகதி அன்று தன்னுடைய 16 வயது மகள் பியோனாவை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதையடுத்து புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணை முன்னெடுத்து பியோனாவின் செல்போன் அழைப்புகளைஆராய தொடங்கியுள்ளனர். பியோனா உயிரிழந்த பிறகு அவருடைய செல்போனில் இருந்து ஒரு இளைஞருக்கு தொடர்ந்து மெசஜ் சென்றிருப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதற்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு விசாரணையில், பிரான்சிஸ்க்கு 18 வயதில் சாம்சன் என்ற மகனும் உள்ளார். அவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த இளம்பெண்ணை 2017 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தால் மனம் உடைந்த சாம்சன் அன்றிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வேலை எதற்கும் செல்லாமல் வீட்டிலே இருந்தார். யாரிடமும் பேசாமல் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா பயன்படுத்துவதை மட்டுமே பொழுதுபோக்காக கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த பிரான்சிஸ், சாம்சனின் செல்போனை பறித்துள்ளார்.
ஆனால் பியானோவிற்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார். இது சாம்சனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பொலிஸாரின் சந்தேகம் சாம்சன் பக்கம் திரும்பியது. அவரை பின் தொடர்ந்த போது சந்தேகத்திற்குரிய இடத்திற்கு அடிக்கடி போய் வருவதையும் கவனித்த பொலிஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
அவர் விசாரணையில் கொலை செய்ததை சாம்சன் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த சம்பவம் இடம்பெற்ற அன்று பியானோவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு பின்புறம் 25 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பியானோவின் ஆண் நண்பருக்கு செல்போனில் தொடர்ந்து மெசேஜ் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதையடுத்து அவர் தெரிவித்த பகுதியை பொலிஸார் தோண்டிப் பார்த்த போது பியானோவின் எலும்புக்கூடாக கிடந்தார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு பியானோவுடையதா என்பதை கண்டறிய அவருடைய உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தல் வழக்கை கொலைக்கு மாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.