ஜப்பான் எல்லைக்குள் அமெரிக்காவின் போர் விமானத்தில் இருந்து தவறுதலாக விழுந்த குண்டு..!!!
ஜப்பானின் அனுமதியோடு அமெரிக்கா தங்கள் போர் விமானங்களை ஜப்பானின் பகுதியில் உள்ள அமோரி மாகாணத்தின் மிசாவா என்ற விமானப்படை தளத்தில் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த நிலையில் ஜப்பான் விமானத்தளத்தில் இருந்த அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
குறித்த பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எப்-16 எனப்படும் அதிநவீன போர் விமானத்தில் இருந்து திடீரென தரையை நோக்கி வெடி குண்டு ஒன்று விழுந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குறித்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இந்த சம்பவம் வேணும் என்று செய்யாமல் யாருக்கும் தெரியாமல் தவறுதலாக நடந்த ஒரு விபத்து என்றும் போர் விமானத்தில் இருந்து விழுந்தது போலி குண்டு தான் எனவும் கூறியுள்ளார்.