பிரதமர் பதவியை இராஜினாமா செய்த அதெல் அப்துல் மஹதி…!!!
ஈராக்கு தொடர்ந்தும் பேரழிவை சந்தித்து வரும் ஒரு நாடாகும். சதாம் உசேன் ஆட்சிக்கு பின்னர் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போயுள்ளது. தொடர்ச்சியாக அங்கு நடந்த யுத்தங்களால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. வேலை இல்லா திணறி வருகின்றன. ஊழலுக்கு குறைவில்லை. இது மக்கள் மத்தியில் அரசின் மீது பெரும் குற்றம் சாட்டியிட்டுள்ளது.
ஈராக் நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி எதிராக மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இந்த நிலையில் ஈராக்கில் இடம்பெற்று வரும் போராட்டங்களின் எதிரொலியாக ஈராக் நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் எனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டேன் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.