சிறுமியை கடலுக்கு அடியில் இழுத்துச் சென்று கடித்து குதறிய டால்பின்கள்..!!! பிரித்தானியா நடந்த சோகம்..!
பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுமியை 02டால்பின்கள் கடலுக்கு அடியில் இழுத்து சென்று கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேன்கன் நகரத்தில் பென் கடற்கரையில் நடைபெற்ற டால்பின்களுடனான நிகழ்ச்சியின் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த 10 வயதுடைய லேக்ஸி என்ற சிறுமி குடும்பத்துடன் மெக்ஸிக்கோவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கேன்கன் நகரத்தில் நடைபெற்ற டால்பின் நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர். அதன் போது இரண்டு டால்பின்கள் லேக்ஸியை கடலுக்குள் இழுத்துச்சென்று கடித்து குதறியுள்ளது.
அதைப் பார்த்த லேக்ஸியின் தாய் லாரா-ஜேன் யியோ அதிர்ச்சியில் அடைந்துள்ளார். பயிற்சியாளர்களிடம் இருந்து வேண்டுகோள் விடுத்த போதிலும் டால்பின்கள் தாக்குவதை நிறுத்தவில்லை ஆனால் லேக்ஸி வைத்திருந்த பாடிபோர்டின் மூலம் சமாளித்து தப்பியுள்ளார். அந்த தாக்குதலில் டால்பின்கள் கடித்து குதறியதால் கொடூரமான காயங்களுடன் லேக்ஸி உயிர் தப்பியுள்ளார். மோசமான கடல் நிலைமைகளுக்கு உட்பட்டதால் துன்பப்பட்ட டால்பின்கள் அவ்வாறு நடந்துக்கொண்டதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியுள்ளார்.