அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை….!!!
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றவியல் பிரேரணையை முன்வைப்பதற்கான ஆதாரங்கள், அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குற்றவியல் பிரேரணை தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிபுணர்கள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நலனை விட, தமது சுயநலத்துக்காக டோனால்ட் டிரம்ப் அதிக அக்கறைக் காட்டி இருப்பதாக, அமெரிக்க சட்டவாக்குனர்களின் முக்கிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவர் மீண்டும் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அதிபராக தெரிவு செய்யப்படுவதற்கு, யுக்ரெயினின் ஆதரவைக் கோரியுள்ளதன் மூலம், அமெரிக்காவின் அரசியல் நடவடிக்கைகளில் வெளிநாடுகள் தலையிட இடம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இந்த குற்றச்சாட்டுகளைஅமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார்.