படுக்கையில் சிறுநீர் கழித்த 5 வயது மகனை அடித்து கொன்ற பெற்றோர்..!! அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!!!
அமெரிக்காவில் 5 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் கோபம் அடைந்த பெற்றோர் அவனை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Illinois-ஐ சேர்ந்த ஆண்ட்ரூ ப்ரூயண்ட் மற்றும் ஜோயன் குன்னிங்கம் என்ற தம்பதியினக்கு 5 வயதுடைய ஏஜே ப்ரூயண்ட் என்ற மகன் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் குறித்த சிறுவன் படுக்கையில் உட்கார்ந்திருந்த போது உடையுடன் அப்படியே சிறுநீர் கழித்துள்ளான். அதைத் கண்ட ஜோயனுக்கு கோபம் வந்த நிலையில் ஏஜேவை சரமாரியாக அடித்துள்ளார், அவருடன் சேர்ந்து ஆண்ட்ருவும் அடித்தார்.
ஏஜே ப்ரூயண்ட்க்கு படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தான். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஏஜேவை இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜோயன் மீதான குற்றச்சாட்டு தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து அவருக்கு 20 வருடங்களில் இருந்து 60 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜோயனுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது. அதே வேளையில் ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.